2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 84 இணைய முடக்கங்கள் பதிவாகியுள்ளன.
உலக ஜனநாயக நாடுகளிலேயே இது தான் மிக அதிகபட்ச ஒரு எண்ணிக்கையாகும் என்பதோடு இது இராணுவ ஆட்சியின் காரணமாக நாட்டில் இது போன்ற 85 இணைய முடக்கங்களை எதிர் கொண்ட மியான்மர் மட்டுமே இந்தியாவினை விஞ்சியுள்ளது.
Access Now எனப்படும் எண்ணிம உரிமைகள் அமைப்பானது இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் அதிக எண்ணிக்கையிலான இணைய முடக்கங்களை எதிர் கொண்ட ஒரு நாடாக இந்தியா குறிப்பிடப் படாதது இதுவே முதல் முறையாகும்.
இந்த 84 முடக்கங்களில், 41 போராட்டங்கள் தொடர்பானவை, அவற்றில் 23 வகுப்புவாத வன்முறை காரணமாக அமல்படுத்தப்பட்டன.
மணிப்பூரில் தான் இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான முடக்கங்கள் (21) விதிக்கப் பட்டன, அதைத் தொடர்ந்து ஹரியானா (12) மற்றும் ஜம்மு & காஷ்மீர் (12) இடம் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு 54 நாடுகளில், சுமார் 296க்கும் மேற்பட்ட அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட இணைய முடக்கங்கள் பதிவாகின.