2021 ஆம் ஆண்டு ஆய்வின் படி, இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதிக்கும் மேற் நபர்களின் (கிட்டத்தட்ட 20 கோடி பேர்) இரத்தத்தில் காரீயத்தின் அளவு ஒரு டெசி லிட்டருக்கு 5 மைக்ரோ கிராமிற்கும் (µg/dL) அதிகமாக இருப்பதாக மதிப்பிடப் பட்டு உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப் படி, 5 µg/dL என்ற அளவிற்கு மேற்பட்ட எந்த ஒரு நிலையிலும் ஒரு நபர் உள்ளார் என்பது "ஒரு நபர் இந்தக் காரீயத்தின் தாக்கத்திற்கு உள்ளாகும் வழிகள் குறித்து முழுமையாக ஒரு மறுபரிசீலனை செய்வதற்கும், இந்த வெளிப்பாட்டைக் குறைக்க அல்லது முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு நடவடிக்கை மேற்கொள்வதற்குமான ஒரு தூண்டுதலாகும்".
குழந்தைகள் இதனால் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளனர்.
பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையே உள்ள கற்றல் இடைவெளியில் ஐந்தில் ஒரு பங்கு காரீய நஞ்சேற்றம் கொண்டுள்ளது.
காரீய நஞ்சேற்றத்தின் விளைவுகள் ஆனது நரம்பியல் குறைபாடுகள் மற்றும் கற்றல் குறைபாடுகள் முதல் குன்றிய வளர்ச்சி மற்றும் உடல் உறுப்பு சேதம் போன்றவையாக இருக்கும்.
இது உலகளவில் கருத்தில் கொள்ளப் பட்ட ஒன்றாக இருந்தாலும், இந்தியாவில் காரீய நஞ்சேற்றம் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.