உலகளவில் தேனீக்கள் தொழில் துறையினை நன்கு அச்சுறுத்தும் ஒரு அயல் அல்லது பூர்வீகம் சாரா வண்டு இனமானது இந்தியாவில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தேனீ வளர்ப்புத் தோட்டத்தில், ஐரோப்பிய தேனீக்களின் அல்லது அபிஸ் மெல்லிஃபெரா சற்று பெரியக் கூட்டத்தில் சிறிய தேனடை வண்டு (ஏதினாடுமிடா) பதிவு செய்யப்பட்டது.
1867 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் துணை-சஹாராப் பகுதியில் இது பதிவு செய்யப் பட்டதிலிருந்து, அது கண்டங்கள் முழுவதும் பரவி அழிவை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியாவில், பத்தாண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கும் முன்பே பிலிப்பைன்ஸ், தென் கொரியா மற்றும் சீனாவில் இது பதிவு செய்யப்பட்டது.
இந்த இனங்கள் ஆனது மிகவும் வேகமாக பெருகி பரவக்கூடும் என்பதால், அவை தேனீ வளர்ப்புத் தொழிலுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.