உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் உள்ள துத்வா புலிகள் வளங்காப்பகத்தில் ஓர் அரிய நீண்ட மூக்கு கொண்ட கொடி பாம்பு (அஹேதுல்லா லாங்கிரோஸ்ட்ரிஸ்) மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வகை பாம்பு இம்மாநிலத்தில் ஆவணப்படுத்தப்படுவது முதல் முறையாகும் என்ற ஒரு நிலையில் இது இந்தியாவில் பதிவு செய்யப்படுவது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக, அஹேதுல்லா லாங்கிரோஸ்ட்ரிஸ் என்பது கடந்த ஆண்டு பீகார் மற்றும் ஒடிசாவில் ஒரு முறை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இனம் பொதுவாக தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.