TNPSC Thervupettagam

இந்தியாவில் பயில் திட்டம்

March 29 , 2018 2306 days 730 0
  • இந்தியாவில் உயர்கல்வி பயில, வெளிநாட்டு மாணவர்களை கவர்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது (Ministry of Human Resources Development) “இந்தியாவில் பயில்” (Study in India) என்ற  திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்தியாவில் பயில் திட்டத்தின் முதன்மை நோக்கங்களாவன,
    • கவர்ச்சிகரமான கல்வி இலக்காக (attractive education destination) இந்தியாவை அடையாளம் காட்டுவதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களை இலக்கிடல்.
    • கல்வி கற்பதற்காக இந்தியாவிற்கு வருகின்ற சர்வதேச மாணவர்களுக்கும் இந்தியாவிலிருந்து செல்கின்ற  மாணவர்களுக்கும் எண்ணிக்கையில் உள்ள சமநிலையின்மையை குறைத்தல் .
  • 2018 ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் உயர்கல்வி தரவரிசையில் (Times Higher Education Ranking) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் உள்ள 38 சதவீதத்தினர் இந்திய மாணவர்களாவர்.
  • இதன் நேர்மாறாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (Indian Institute of Science - IISc) வெறும் ஒரு சதவீதம் மட்டும் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர்.
  • 2016-17 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி மீதான அனைத்திந்திய கணக்கெடுப்பு (All India Survey on Higher Education) அண்மையில் வெளியிடப்பட்டது. இது இந்தியப் பல்கலைக்கழகங்களில் வெறும் 47,575 வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே பயில்வதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்