TNPSC Thervupettagam

இந்தியாவில் முதலாவது பகல்/இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

October 29 , 2019 1728 days 612 0
  • இந்தியா தனது முதலாவது பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கொல்கத்தாவில் அடுத்த மாதம் வங்க தேசத்திற்கு எதிராக நடத்தவுள்ளது
  • நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கும் வங்க தேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஈடன் கார்டன் மைதானத்தில் ஒளி வெள்ளத்தின் கீழ் விளையாடப்பட இருக்கின்றது.
  • இந்தியாவில் இளஞ்சிவப்பு நிறப் பந்தைக் கொண்டு விளையாடப்படும் முதலாவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.
  • ஐந்து நாட்கள் கொண்ட ஆட்டத்திற்கு இது ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • 2015 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இதுவரை 11 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்