TNPSC Thervupettagam

இந்தியாவில் மொழியியல் தரவு

March 6 , 2025 27 days 125 0
  • இந்தி மொழி பேசாதவர்கள் பொதுவாக புதிய மொழிகளைக் கற்க தயாராக உள்ளனர், அதே நேரத்தில் இந்தி மொழி பேசுபவர்கள் மிக குறைவான பன்மொழித் தன்மையைக் கொண்டுள்ளனர்.
  • 1991 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பேசும் 84.5% நபர்கள் (மாநிலத்தில் தமிழ் மொழியை முதல் மொழியாகப் பேசுபவர்கள்) ஒருமொழி பேசுபவர்களாக இருந்தனர், இது 2011 ஆம் ஆண்டில் 78% ஆகக் குறைந்தது.
  • இதே போல், ஒடிசாவில் தாய்மொழியாக ஒடியா மொழி பேசுபவர்களின் (ஒருமொழி பேசும் நபர்கள்) பங்கு 86 சதவீதத்திலிருந்து 74.5% ஆகக் குறைந்தது.
  • இதற்கு நேர்மாறாக, இந்தி மொழி முதன்மையான மொழியாக இருக்கும் சில மாநிலங்களில் ஏற்கனவே ஒரு மொழி பேசுபவர்களின் பங்கு மிக அதிகமாக இருந்தது, என்பதோடு மேலும் பல சூழல்களில் இந்தப் பங்கானது காலப்போக்கில் அதிகரித்தது.
  • உதாரணமாக, 1991 ஆம் ஆண்டில், பிரிக்கப் படாத பீகார் மாநிலத்தில் இந்தி மொழி பேசுபவர்களில் 90.2% பேர் ஒருமொழி பேசுபவர்களாக இருந்தனர்.
  • 2011 ஆம் ஆண்டில், பிரிக்கப்பட்ட பீகாரில், இந்த எண்ணிக்கை 95.2% ஆக உயர்ந்தது.
  • இதே போல், இராஜஸ்தானில் 1991 ஆம் ஆண்டில் இந்தி மொழி பேசுபவர்களில் 93% ஆக இருந்த ஒரு மொழி பேசுபவர்களின் பங்கு ஆனது 2011 ஆம் ஆண்டில் 94.3% ஆக அதிகரித்தது.
  • தமிழ்நாட்டில், 1991 ஆம் ஆண்டில் 13.5% தமிழ் பேசுபவர்கள் ஆங்கில மொழியையும் பேசுபவர்களாக உள்ளனர், இது 2011 ஆம் ஆண்டில் 18.5% ஆக உயர்ந்தது.
  • இதற்கு நேர்மாறாக, ஹரியானாவில், ஆங்கில மொழியையும் பேசும் இந்தி மொழி பேசுபவர்களின் பங்கு ஆனது அதே காலக் கட்டத்தில் 17.5 சதவீதத்திலிருந்து 14.6% ஆகக் குறைந்துள்ளது.
  • தமிழ்நாட்டில், 1991 ஆம் ஆண்டில் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட 0.5% பேர் மட்டுமே இந்தி மொழியை பேசினர் என்பதோடு இந்த எண்ணிக்கை ஆனது 2011 ஆம் ஆண்டில் 1.3% ஆக சற்று உயர்ந்தது.
  • ஆனால், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இந்தி மொழியையும் பேசும் தாய்மொழி பேசுபவர்களின் பங்கில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்