TNPSC Thervupettagam

இந்தியாவில் வருமானம் மற்றும் செல்வ வளத்தில் நிலவும் சமத்துவமின்மை 1922-2023

March 27 , 2024 114 days 182 0
  • “இந்தியாவில் வருமானம் மற்றும் செல்வ வளத்தில் நிலவும் சமத்துவமின்மை, 1922-2023: பில்லியனர்கள் இராஜ்ஜியத்தின் எழுச்சி” என்ற அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • சமத்துவமின்மையானது இந்தியாவில் 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து அதிகரித்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில், நாட்டின் மக்கள்தொகையில் அதிக செல்வ வளம் மிக்க ஒரு சதவீத மக்களின் வருமானம் மற்றும் செல்வ வளத்தின் பங்குகள் ஆகியவை முறையே 22.6 சதவீதம் மற்றும் 40.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டிற்குள், அதிக செல்வ வளம் மிக்க ஒரு சதவீத மக்களின் வருமானம் மற்றும் செல்வ வளத்தின் பங்குகள் ஆனது (22.6 சதவீதம் மற்றும் 40.1 சதவீதம்) இது வரையில் இல்லாத அளவிற்கான மிக அதிக அளவில் இருந்தன.
  • இந்தியாவின் அதிக செல்வ வளம் மிக்க ஒரு சதவீத மக்களின் வருமானப் பங்கு, தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பதிவானதை விடவும், உலகிலேயே மிக அதிகமானதாகவும் உள்ளது.
  • 1950 ஆம் ஆண்டுகளில் அதிகரித்த, அதிக செல்வ வளம் மிக்க ஒரு சதவீத மக்களின் வருமானப் பங்குகள் ஆனது, அடுத்த இருபது ஆண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து 1982 ஆம் ஆண்டில் 6.1 சதவீதத்தை எட்டியது.
  • அடுத்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து 2022 ஆம் ஆண்டில், 22.6 சதவீதத்தை எட்டி இதுவரையில் இல்லாத அளவிற்கு இது உயர்ந்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 167 பணக்காரக் குடும்பங்களின் நிகரச் செல்வத்தின் மீது விதிக்கப் படும் இரண்டு சதவீத "மிகை வரி" ஆனது தேசிய வருமானத்தில் 0.5 சதவீத வருவாயினை ஈட்டும்.
  • 1922 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்த, அதிகச் செல்வ வளம் மிக்க ஒரு சதவீத மக்களின் வருமானப் பங்கு ஆனது, இரு போர்களுக்கு இடைபட்ட காலத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்