டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘இந்தியாவை ஒரு முதன்மை நாடாக மாற்றச் செய்வதற்கான’ பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்து தனது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அளவிலான ஒரு இலட்சியத்தை வெளியிட்டார்.
அவர் நல்லாட்சிக்கான ஒரு ஐந்து அம்சத் திட்டத்தினை முன்மொழிந்தார். அது
இந்த நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசமான மற்றும் தரமான கல்வி.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனை வசதிகளுடன் கூடிய இலவச மற்றும் சிறந்த மருத்துவச் சிகிச்சை.
சரியான கருத்தாக்கம் மற்றும் நிர்வாகத்துடன் சாத்தியமாகின்ற ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு.
ஒவ்வொரு பெண்ணுக்கும் மரியாதை, சம உரிமை மற்றும் பாதுகாப்பு
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்து, தான் விவசாயிகளாக மாற விரும்புவதாக குழந்தைகள் பெருமையுடன் சொல்லும் அளவிற்கு கௌரவத்தினைப் பெறச் செய்தல்.