இந்திய அரசின் இந்திர தனுஷ் திட்டமானது ஒரு சுகாதார நல முன்னெடுப்பாகும்.
இத்திட்டமானது முதலில் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டமானது, இந்தியாவில் 90% முழு நோய்த்தடுப்புத் திறன் பரவலை எட்டச் செய்வதையும், 2022ஆம் ஆண்டில் இதனை நிலைபெறச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெற்றிகரமான கோவிட் – 19 தடுப்பூசி வழங்கீடு மட்டுமல்லாமல், 90.5% பரவலுடன் முழு நோய்த் தடுப்புத் திறன் வழங்கீட்டில் இந்தியாவிலேயே அதிகப் பரவல் கொண்ட மாநிலமாக ஒடிசா திகழ்கிறது.