கொளத்தூர், கீழ்ப்பாக்கம், விளாத்திக் குளம், தொப்பம்பட்டி, அணைக்கட்டு, கலசப் பாக்கம், திருக்காட்டுப்பள்ளி, லால்குடி, கடையம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் ரூ.150 கோடி செலவில் மேலும் 10 கல்லூரிகளை இந்து சமய அறநிலையத்துறை தொடங்க உள்ளது.
சென்னை, பழனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் ரூ.5 கோடி செலவில் முதியோர் இல்லங்கள் நிறுவப்படும்.
ஆலயத்தின் திருமண மண்டபத்தில் திருமணம் நிகழ்த்தப்பட்டால் அதற்காக பராமரிப்புக் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும்.
முடியிறக்கும் சடங்கும் இலவசமாக்கப் பட்டுள்ளது எனவே அந்தத் தொகையைக் கோவில் நிர்வாகமே செலுத்தும்.
கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பொங்கல் பண்டிகையின் போது புதிய ஆடைகள் வழங்கப் படும்.
திருச்சி அருகே சமயபுரத்திலுள்ள புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் ‘அன்னதானம்’ வழங்கும் முறையானது அறிமுகப்படுத்தப் படும்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதசாமி ஆலயத்தையடுத்து திருச்சி மாவட்டத்தில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் 2வது பெரிய கோயிலாக இது மாறும்.
சமயபுரம் கோயில் மட்டுமின்றி, திருத்தணி மற்றும் திருச்செந்தூர் ஆகிய ஊர்களிலுள்ள ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயில்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப் படும்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கும் முறை 2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
திருச்செந்தூர் ஆலயத்தினைச் சீரமைக்க ரூ.150 கோடியையும் பெரிய பாளையத்திலுள்ள பவானி அம்மன் ஆலயத்தைச் சீரமைக்க ரூ.250 கோடியையும் அமைச்சர் அறிவித்தார்.
பழனி, சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி மற்றும் ராமேஷ்வரம் ஆகிய இடங்களிலுள்ள கோயில்களில் போதுமான வசதியை நிறுவுவதற்கு ரூ.250 கோடி நிதி வழங்கப் படும்.
கோயில்களில் பக்தர்கள் வழங்கிய சிறுசிறு ஆபரணங்களை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி, அவற்றை வங்கிகளில் வைத்து கோயில்களின் வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்களுக்கு நிதி திரட்ட அதனை மாநில அரசு பயன்படுத்தும்.
திருத்தணி, பழனி, சமயபுரம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய ஊர்களிலுள்ள பெரிய கோயில்களில் தங்க ஆபரணங்கள் அதிகளவில் உள்ளன.
2000 கிலோகிராம் எடையிலான தங்க ஆபரணங்களை இதன் மூலம் தங்கக் கட்டிகளாக மாற்ற இயலும்.
இத்துறையானது 1978 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இப்பணியைச் செய்து வந்தது.