ரூ.244 கோடி மதிப்பிலான இந்தூர் மாநகராட்சிக் கழகத்தின் (IMC) பசுமைப் பத்திரம் ஆனது, அறிவிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட வரம்பினை விட அதிகமாக அளவிற்கு வரவேற்கப் பட்டது.
இந்தூர் மாநகராட்சிக் கழகமானது பொதுப் பங்கு வெளியீட்டினை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் ஆட்சி அமைப்பு ஆகும்.
இதன் மூலம், அந்த உள்ளாட்சி அமைப்பானது அதன் மின்சார செலவைக் குறைக்கச் செய்வதற்காக கார்கோன் எனுமிடத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 60 மெகாவாட் திறன் கொண்ட மாபெரும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை நிறுவ உள்ளது.