TNPSC Thervupettagam

இந்தோனேசியாவின் தலைநகர் மாற்றம்

April 3 , 2023 475 days 235 0
  • ஜகார்த்தா நகரமானது நெரிசல் மிக்கதாகவும், மாசுபாடு நிறைந்ததாகவும், அவ்வப் போது நிலநடுக்கத்தினால் பாதிக்கப்படுகின்றதாகவும் மற்றும் விரைவாக ஜாவா கடலில் மூழ்கும் அபாயம் கொண்டதாகவும் உள்ளது.
  • இது உலகிலேயே மிகவும் விரைவாகக் கடலில் மூழ்கி வரும் நகரம் என்று குறிப்பிடப் படுகிறது.
  • தற்போதைய நிலவரப்படி, 2050 ஆம் ஆண்டில் இந்த நகரின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இதனால், தற்போது அந்நாட்டு அரசாங்கமானது, இந்தோனேசியாவின் தலைநகரைப் போர்னியோ தீவுக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
  • இந்தோனேசியாவின் சுதந்திரத் தினத்துடன் ஒன்றும் வகையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று இந்த நகரம் தலைநகரமாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்