போலந்தில் நடைபெற்ற 11வது உலக நகர்ப்புற மன்றத்தில் இயற்கை சார்ந்தத் தீர்வுகளுக்கான இந்திய மன்றம் தொடங்கப்பட்டது.
இந்த மன்றமானது பின்வருவனவற்றால் இணைந்து தொடங்கப்பட்டது
தேசிய நகர்ப்புற விவகாரங்கள் கல்வி நிறுவனம் (NIUA)
உலக வள நிறுவனம் - இந்தியா (WRI இந்தியா)
நகரங்களுக்கான பருவநிலை மையம் (NIUA C-Cube) மற்றும் அவற்றின் பங்குதார அமைப்புகள்.
இது நகர்ப்புற இயற்கை சார்ந்தத் தீர்வுகளுக்கான (NbS) இந்தியாவின் முதல் தேசிய அளவிலான கூட்டணித் தளமாகும்.
இது Cities4Forest என்ற முன்னெடுப்பின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற இயற்கை சார்ந்தத் தீர்வுகளை உருவாக்குவதற்கு உதவுவதற்காக நகர்ப்புற இயற்கை சார்ந்தத் தீர்வுகளுக்கான தொழில்முனைவோர், ஒத்த கருத்து கொண்ட நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒரு கூட்டாண்மையை உருவாக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.