TNPSC Thervupettagam

இயற்கை மருத்துவ தினம் - நவம்பர் 18

November 20 , 2018 2139 days 921 0
  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று மத்திய ஆயுஷ் அமைச்சகமானது (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) முதலாவது இயற்கை மருத்துவ தினத்தை இந்தியா முழுவதும் அனுசரித்தது.
  • இத்தினமானது உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதன் மூலம் நோய்களைத் தடுப்பதற்காக மருந்தில்லா மருத்துவ அமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய மன்றமானது நவம்பர் 14 முதல் நவம்பர் 18 வரை மருத்துவ முகாம்கள், பயிலரங்கம் மற்றும் கண்காட்சிகள் ஆகியவற்றை நடத்தியது.
  • புதுதில்லியின் பாலாஜி நிரோக்தாமில் சமூக மண் குளியல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 700 நபர்கள் மண் குளியலை மேற்கொண்டனர்.
  • இந்த நிகழ்ச்சி ஒரு உலக சாதனையாகும். தற்பொழுது இந்நிகழ்ச்சியானது ஆசிய சாதனைகள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இயற்கை மருத்துவ சிகிச்சையின் 5 இயற்கை முறைகளில் மண் குளியலும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்