ஆராய்ச்சி முடிவுகளின் மீது மேற்கொள்ளப்படும் புகழ்பெற்ற இயற்கைத் தன்மைக் குறியீட்டினால் 2019 – 20 ஆம் ஆண்டிற்காக வெளியிடப்பட்ட தகவலின் படி இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களிடையே ஹைதராபாத் பல்கலைக் கழகமானது முதலிடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் இயற்கைத் தன்மைக் குறியீட்டில் பெய்ஜிங்கில் உள்ள சீன அறிவியல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
2020 ஆம் ஆண்டு இயற்கைத் தன்மைக் குறியீட்டினால் சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமானது இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களிடையே முதலிடத்திலும் இந்தியப் பல்கலைக் கழகங்களிடையே 21வது இடத்திலும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
“இயற்கைத் தன்மைக் குறியீடானது” இயற்கை மற்றும் இயற்பியல் அறிவியலில் உயர்தர ஆராய்ச்சியின் குறிகாட்டியாக விளங்குகின்றது.
இயற்கைத் தன்மைக் குறியீட்டின் வருடாந்திர அட்டவணையானது உயர்தர ஆராய்ச்சியின் உயரிய முடிவுகளைக் கொண்ட நிறுவனங்களைப் பட்டியலாக வெளியிடுகின்றது.