சியுகுரோ மனாபே, கிளாஸ் ஹாசல்மேன் மற்றும் ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு 2021 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது வழங்கப்பட்டது.
சிக்கலான இயற்பியல் அமைப்புகளைப் புரிந்து கொள்வதற்காக வேண்டி அவர்கள் ஆற்றிய சில அற்புதமான பங்களிப்பிற்காக இவர்களுக்கு இந்த விருதானது வழங்கப் பட்டது.
இயற்பியலுக்கான நோபல் பரிசானது சுவீடனின் ஸ்டாக்ஹோம் எனுமிடத்தில் அமைந்த ராயல் ஸ்வீடிஸ் அகாடமியினால் வழங்கப்படுகிறது.
புவியின் பருவநிலை குறித்த இயற்பியல் படிம முறையாக்கல், மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமயமாதலை நம்பத்தகுந்த வகையில் கணித்தல் போன்றவற்றிற்காக சியுகுரோ மனாபே (அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்) மற்றும் கிளாஸ் ஹாசல்மேன் (ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் அமைந்த மேக்ஸ் பிளாங்க் வானியல் கல்வி நிறுவனம்) ஆகியோருக்கு விருது வழங்கப் பட்டுள்ளது.
அணுவிலிருந்து கிரக அளவீடுகள் வரை இயற்பியல் அமைப்புகளில் ஏற்படும் சீர்குலைவு மற்றும் ஏற்ற இறக்கங்களைக் கண்டறிந்ததற்காக ஜார்ஜியோ பாரிசி (இத்தாலியின் ரோம் நகரிலுள்ள சாப்பியன்சா பல்கலைக்கழகம்) என்பவருக்கு விருது வழங்கப் பட்டது.