இரசாயனப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவு நாள் - நவம்பர் 30
November 30 , 2022 633 days 241 0
இந்தத் தினமானது இரசாயனப் போரினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதோடு, இரசாயன ஆயுதங்களைத் தடை செய்யும் அமைப்பிற்கான உறுதிப்பாட்டினையும் உறுதிப்படுத்துகிறது.
மேலும் இது அமைதி, பாதுகாப்பு மற்றும் பலதரப்பு இலக்குகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தினமானது, ஐக்கிய நாடுகள் சபையினால் (UN) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டு 2005 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப் படுகிறது.
முன்னதாக, இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையானது 1997 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ஏப்ரல் 29 ஆம் தேதியானது இத்தினத்தினை அனுசரிப்பதற்கான தேதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதற்கிடையில், அதற்குப் பதிலாக ஏப்ரல் 29 ஆம் தேதியானது "சர்வதேச இரசாயன ஆயுதத் தடை அமைப்பின் துவக்க தினம்" என்று நியமிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற, இரசாயன ஆயுத உடன்படிக்கைக்கான 20வது பங்கு தாரர்கள் மாநாட்டில் இந்தத் தினத்திற்கான தேதியானது நவம்பர் 30 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.