TNPSC Thervupettagam

இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதியக் குழு

November 11 , 2017 2443 days 758 0
  • நாட்டிலுள்ள கீழ் நிலை நீதிமன்றங்களுக்கான 2-வது தேசிய நீதித்துறை ஊதியக் குழு  (Second National Judicial Pay Commission-SNJPC) அமைக்க பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்த கமிஷனின் தலைவராக உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியான நீதிபதி J.P.வெங்கட்ராமன் ரெட்டியும், உறுப்பினராக கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான R.L.பசந்த் என்பவரும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த ஊதியக் குழுவானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது அமலில் உள்ள நீதித்துறை அலுவலர்களுடைய பணிநிலை மற்றும் ஊதிய அமைப்புகளை  மதிப்பீடு செய்யும்.
  • நாட்டிலுள்ள துணை கீழ்நிலை நீதிமன்றங்களைச் சேர்ந்த நீதித்துறை அலுவலர்களின் ஊதிய அமைப்பு மற்றும் பிற சலுகைப்படிகளை நிர்வகிக்கக் கூடிய பொதுக் கொள்கையை உருவாக்குவதே இக்குழுவின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்