இது அமெரிக்காவில் உள்ள ஒரு பதிப்பகத்தாரான பண்டாலோவினால் 2018 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
இந்தியப் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ராஜ் கமல் ஷா அவர்கள் அவருடைய நாவலான “நகரம் மற்றும் கடற்கரை” (The City and The Sea) என்பதற்காக 2020 ஆம் ஆண்டின் இரவீந்திரநாத் தாகூர் இலக்கிய விருது வழங்கி கௌரவிக்கப் பட்டு உள்ளார்.
ஷாவின் புத்தகமான “நகரம் மற்றும் கடற்கரை” ஆனது 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த நிர்பயா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டதாகும்.
2020 ஆம் ஆண்டின் சமூக சாதனைக்கான இரவீந்திரநாத் தாகூர் இலக்கிய விருதானது ஓமன் நாட்டின் மறைந்த வலிமை வாய்ந்த சுல்தானான சுல்தான் குவாமோஸ் பின் சையது அல் சையது மற்றும் ஓமன் நாட்டின் மக்கள் ஆகியோருக்கு வழங்கப் பட்டுள்ளது.
சமூக சாதனை விருதானது இந்த ஆண்டில் 2 வெற்றியாளர்களைக் கொண்டுள்ளது.
புகழ்பெற்ற இந்திய நடன இயக்குநரான சந்தீப் சோப்பார்க்கர் என்பவர் அதன் மற்றொரு வெற்றியாளர் ஆவார்.