TNPSC Thervupettagam

இராஜஸ்தான் ஆணவக் கொலை மற்றும் கும்பல் கொலை மசோதா

August 7 , 2019 1811 days 1288 0
  • ஆணவம் மற்றும் பாரம்பரியம் என்ற பெயரில் திருமணம் செய்பவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதைத் தடை செய்யும் மசோதா, 2019 ஆனது இராஜஸ்தான் அரசால் நிறைவேற்றப்பட்டது.
  • இது இராஜஸ்தானில் “ஆணவக் கொலை” மற்றும் “கும்பல் கொலை” நிகழ்வுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குடும்ப கௌரவம் என்ற பெயரில் திருமணமானவர்களை கொலை செய்வதற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிப்பதற்கான விதிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.
  • கும்பல் கொலைகளைத் தடுப்பதற்காக 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சட்டம் நிறைவேற்றிய முதலாவது மாநிலம் மணிப்பூர் ஆகும். தற்பொழுது இச்சட்டத்தை நிறைவேற்றிய இரண்டாவது மாநிலம் இராஜஸ்தான் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்