இராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் தனது 96 வயதில் ஸ்காட்லாந்தின் பால்மோரலில் காலமானார்.
இவர் 1952 ஆம் ஆண்டு முதல் 70 ஆண்டுகள் வரை இங்கிலாந்தில் ஆட்சி செய்தார்.
இவர் உலகின் மிக வயதான மன்னர் மற்றும் பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் ஆவார்.
2015 ஆம் ஆண்டில், இராணி எலிசபெத் தனது முப்பாட்டி இராணி விக்டோரியா அவர்களின் ஆட்சிக் காலத்தினை விஞ்சி, நீண்ட காலம் பணியாற்றிய பிரிட்டிஷ் மன்னர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த ஆண்டு, அவர் உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது மன்னர் ஆனார்.
இவர் காமன்வெல்த் அமைப்பின் தலைவராகவும், இங்கிலாந்து தேவாலயத்தின் ஒரு உயர்நிலை ஆளுநராகவும் பணியாற்றினார்.
இராணியின் மரணச் சடங்குகள் மற்றும் பிரிட்டிஷ் அரியணையில் சார்லஸ் (73) அவர்களை நியமிப்பதற்கானத் திட்டங்கள் முறையே ஆபரேஷன் இலண்டன் ப்ரிஜ் மற்றும் ஆபரேஷன் ஸ்பிரிங் டைட் என்று பெயரிடப்பட்டுள்ளன.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நினைவாக செப்டம்பர் 11 ஆம் தேதியன்று முழு நாளும் அரசத் துக்க நாளாக இந்திய அரசு அறிவித்தது.