இது அப்போதைய தலைமைத் தளபதியான 5 நட்சத்திரத் தர வரிசையைக் கொண்ட கே எம் கரியப்பாவை அங்கீகரிப்பதற்காகக் கொண்டாடப்படுகின்றது.
இவர் 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று தளபதியான சர் பிரான்சிஸ் பட்சர் என்பவரிடமிருந்து இந்திய இராணுவத்தின் முதலாவது தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தியாவின் கடைசி ஆங்கிலேயத் தலைமைத் தளபதி பட்சர் என்பவராவார்.
கரியப்பா 1947 ஆம் ஆண்டுப் போரில் இந்தியப் படைகள் வெற்றி பெற்றிடச் செய்தார்.
5 நட்சத்திரத் தரவரிசை கொண்ட தளபதி என்ற பட்டத்தை வைத்திருந்த 2 இந்திய ராணுவ அதிகாரிகளில் இவரும் ஒருவராவார்.
இதில் மற்றொருவர் தளபதி (Field Marshal) சாம் மானேக்சா என்பவராவார்.