TNPSC Thervupettagam

இராணுவப் பயிற்சி - வோஸ்டோக் 2018

August 31 , 2018 2150 days 614 0
  • இரஷ்யா தனது மத்திய மற்றும் கிழக்கு இராணுவ மாகாணங்களில் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 15 வரை இராணுவப் பயிற்சியான வோஸ்டோக் 2018-ஐ (கிழக்கு - 2018) நடத்தவிருக்கிறது.
  • சாபேட் - 81 க்குப் (மேற்கு 8) பிறகு நடைபெறவிருக்கும் மிகப்பெரிய போர் பயிற்சி இந்த வோஸ்டோக் 2018 ஆகும். 1981-ல் அப்போதைய சோவியத் யூனியன் சாபேட் 81 - ஐ 1,00,000 முதல் 1,50,000 வீரர்களுடன் நடத்தியது.
  • ரஷ்யாவின் இராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய பிரிவுகளுடன் சீனா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளும் இப்பயிற்சியில் பங்கேற்கவிருக்கின்றன.
  • மேற்கு நாடுகள் மற்றும் நேட்டோ படைகள் இரஷ்யாவிற்கு எதிராக ஆக்கிரமிப்பு மற்றும் விரோதப் போக்கை கடைபிடித்து வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரஷ்யா இப்போர் பயிற்சியை நடத்தவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்