மத்திய அரசானது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையில் புதிய தேசிய விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு "இராஷ்ட்ரிய 'விக்யான் புரஸ்கார்" (RVP) என்று பெயரிடப் பட்டுள்ளது.
இந்த விருதுகள் ஆனது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு வழங்கப் படுகின்றன.
இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையில் மிக உயரிய அங்கீகாரமாக இது திகழ உள்ளது.
இது நான்கு பிரிவுகளில் வழங்கப்பட உள்ளது.
'விக்யான் ரத்னா' - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் மேற் கொள்ளப்படும் வாழ்நாள் சாதனைகள்.
'விக்யான் ஸ்ரீ' - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் மேற் கொள்ளப்படும் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரித்தல்.
'விக்யான் யுவ-சாந்தி ஸ்வரூப் பட்நாகர்' - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறப்பானப் பங்களிப்பினை ஆற்றிய 45 வயதுக்குட்பட்ட இளம் அறிவியலாளர்களை அங்கீகரித்து ஊக்குவித்தல்.
'விக்யான் குழு' விருது – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறப்பான பங்களிப்பினை ஆற்றிய மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் அல்லது கண்டுபிடிப்பாளர்களைக் கொண்ட குழுவிற்கு வழங்கப் படும்.