TNPSC Thervupettagam

இரு உயர்நிலைக் குழுக்கள்- அரசாங்கம்

July 28 , 2018 2187 days 582 0
  • கும்பல் கலவரங்கள் மற்றும் கும்பல் கொலைகள் தொடர்பான நிகழ்வுகளை திறம்பட கையாளுவதற்கான வழிமுறைகள் மற்றும் சட்ட நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசாங்கம் இரண்டு உயர் நிலைக் குழுக்களை அமைத்திருக்கிறது.
  • இந்த இரண்டு குழுக்களில் ஒரு குழுவில் நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழுவிற்கு மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் கவ்பா தலைமை வகிப்பார்.
  • இந்த நான்கு உறுப்பினர் கொண்ட குழு தனது அறிக்கையினை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சரவைக் குழுவிற்கு அளிக்கும்.
  • அமைச்சரவைக் குழு தனது அறிக்கையினை பிரதம அமைச்சர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பிக்கும்.
  • சமீபத்தில் கும்பல் வன்முறைகள் மற்றும் கும்பல் கொலைகள் தொடர்பாக உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கிய பிறகு இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்