‘நீரில் மூழ்குவதைத் தடுக்கும் விழிப்புணர்வு’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்தியக் காவல்பணி அதிகாரி கிருஷ்ண பிரகாஷ், மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவு வாயில் (கேட்வே) முதல் எலிபெண்டா குகை பகுதி வரையிலான தொலைவினை நீந்தி கடந்தார்.
இந்த 16.20 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 5 மணி 26 நிமிடங்களில் நிறைவு செய்து வரலாற்றில் இவ்வாறு செய்த முதல் நபர் என்ற சாதனையைப் படைத்தார்.
2017 ஆம் ஆண்டில், அவர் உலகின் மிகவும் சவாலான விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான அயர்ன்மேன் டிரையத்லானை நிறைவு செய்தார்.
இந்தச் சாதனையானது பிரகாஷுக்கு ‘இரும்பு மனிதன்’ என்ற பட்டத்தையும் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் வாய்ப்பினையும் பெற்றுத் தந்தது.
இந்தப் பட்டத்தைப் பெற்ற முதல் இந்திய அரசுப் பணியாளர், குடிமைப் பணியாளர் மற்றும் சீருடைப் பணி அதிகாரி இவரே ஆவார்.