TNPSC Thervupettagam

இறப்பு பணிக்கொடை அதிகரிப்பு

September 18 , 2024 9 days 82 0
  • தமிழ்நாடு அரசு ஆனது சமீபத்தில் இறப்பு மற்றும் ஓய்வூதியப் பணிக்கொடைக்கான அதிகபட்ச வரம்பை (DCRG என அறியப்படுவது) 20 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.
  • இந்தத் திருத்தம் ஆனது இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
  • இது ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப உள்ளது.
  • இந்திய அரசானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அதற்குப் பின்னோக்கியத் தேதிகளிலும் செல்லுபடியாகும் வகையில் 25% என்ற ஒரு அளவினை நடைமுறைக்கு கொண்டு வந்தது.
  • எவ்வாறாயினும், ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 84,000 ரூபாய் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் அல்லது இறப்பு பணிக் கொடை கிடைக்கும்.
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் பெரும்பாலான ஊழியர்கள் இந்த உயர்வைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள்.
  • ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை ஆகியவை தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள், 1978 மற்றும் பணிக்கொடைச் சட்டம், 1972 எனப்படுகின்ற இரண்டு வெவ்வேறுச் சட்டங்கள் மற்றும் விதிகள் மூலம் கையாளப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்