பாரத் மிகுமின் நிறுவனமானது தெலுங்கானாவின் காலேஸ்வரம் இறைப்பு நீர்ப்பாசனத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.
இறைப்பு நீர்ப் பாசனத்தில், நீர் இயற்கையான ஓட்டத்தில் அல்லாமல் குழாய்கள் அல்லது தூக்குக் குழாய்கள் மூலம் இறைக்கப்படுகின்றது.
இந்த நீரானது நீர்ப் பாசனத்திற்காகப் பயன்படுத்தப் படவிருக்கின்றது.
ஸ்ரீபடா எல்லம்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து 89 கியூமெக்ஸ் (ஒரு வினாடிக்கு 89 கன மீட்டர்கள்) நீரானது 106 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டு மேடாராம் நீர்த் தேக்கத்திற்கு கொண்டு செல்லப்படவிருக்கின்றது.