TNPSC Thervupettagam
October 28 , 2018 2123 days 735 0
  • புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளரான பென்யாமினின் ஜாஸ்மின் டேஸ் (மல்லிகை நாட்கள்) என்ற நாவல் புது தில்லியில் புதிதாகத் தொடங்கப்பட்ட இலக்கியத்திற்கான JCB விருதினை வென்று இருக்கின்றது.
  • இந்த விருது ஒரு பரிசுக் கோப்பையையும், 25 லட்ச ரூபாய் பரிசுத் தொகையையும் கொண்டிருக்கின்றது. 2018 ஆம் ஆண்டின் விருது பெற்ற புத்தகம் மலையாளத்திலிருந்து ஆங்கில மொழிக்கு ஷாநாஸ் ஹபீபால் மொழிபெயர்க்கப்பட்டது. இதற்காக அவர் கூடுதலாக 5 லட்ச ரூபாயை பரிசாக பெற்றார்.
  • பென்யாமின் முன்னதாக தனது ஆடுஜீவிதம் என்ற புத்தகத்திற்காக கேரள சாகித்ய அகாடமி விருதினையும் வென்றிருந்தார்.
இலக்கியத்திற்கான JCB விருது
  • இலக்கியத்திற்கான JCB விருது ஒரு லாபம் சாராத தனியார் நிறுவனமான JCB இலக்கிய அமைப்பால் அளிக்கப்படுகின்றது. இது 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இவ்விருதிற்கு ஐக்கியப் பேரரசைச் சார்ந்த கட்டுமான நிறுவனமான JCB நிறுவனத்தால் நிதியளிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்