இலங்கை அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்கே இலங்கை நாட்டின் 9வது குடியரசுத் தலைவராக அந்நாட்டின் பாராளுமன்றத்தினால் தேர்வு செய்யப் பட்டு உள்ளார்.
அந்நாட்டின் மிக மோசமானப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் கோபமடைந்து போராட்டம் நடத்தியதை அடுத்து நாட்டை விட்டு வெளியேறி ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நெருக்கடிக் காலத்தில் ரணில் பிரதமராக இருந்தார்.
ராஜபக்சே தப்பியோடியப் பிறகு, ரணில் இலங்கையின் இடைக்கால குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.