பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த அரசியான இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 08 ஆம் தேதியன்று காலமானார்.
திட்டமிட்டச் சடங்குகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் மற்றும் அரச சிம்மாசனத்தின் அடுத்த உரிமையாளர் உள்ளிட்ட நெறிமுறைகள் இலண்டன் பிரிட்ஜ் நடவடிக்கை என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் அரசி ஸ்காட்லாந்தில் இருந்த போது இறந்தால் யூனிகார்ன் நடவடிக்கை எனப்படும் சிறப்பு ஏற்பாடுகள் அப்போது நடைமுறையில் இருந்தன.
யூனிகார்ன் நடவடிக்கை என்ற சொல் ஆனது முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் வெளியான எடின்பர்க் பாராளுமன்ற இணைய ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டது.