ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி குசெஸ்தான் என்ற ஒரு பிராந்தியத்தில் 53 பில்லியன் பீப்பாய்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் கொண்ட ஒரு பரந்த எண்ணெய் வயல் புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது ஈரானின் இரண்டாவது பெரிய எண்ணெய் வயலாகும். முதலாவது பெரிய எண்ணெய் வயலானது அஹ்வாஸ் என்ற பிராந்தியத்தில் 65 பில்லியன் பீப்பாய் அளவினைக் கொண்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி முடிந்தவுடன், ஈரான் உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் வளம் நிறைந்த நாடாக மாறக்கூடும்.