TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தின் 75 ஆம் ஆண்டு நிறைவு

January 30 , 2025 2 days 66 0
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது தனது 75 ஆம் ஆண்டு நிறைவினை கொண்டாடுகிறது.
  • இந்தியா 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தை கொண்டிருந்தது.
  • மாகாணங்களுக்கு இடையிலான சில தகராறுகளைக் கையாளுதல் மற்றும் கீழமை நீதிமன்றங்களின் மேல்முறையீடுகளை விசாரித்தல் போன்ற செயல்பாடுகளை மேற் கொண்ட கூட்டாட்சி நீதிமன்றம் ஆனது 1937 முதல் 1950 ஆம் ஆண்டு வரை செயல் பட்டது.
  • இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய வடிவம் நிறுவப்பட்டது.
  • இது இலண்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றம் மற்றும் மேலவையின் நீதித்துறை குழுவிற்கு மாற்றாக அமைந்தது.
  • அதன் முதல் அமர்வானது தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்னதாக, பாராளுமன்றக் கட்டிடத்தில் உள்ள இளவரசர்களின் அறையில் நடைபெற்றது.
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதியன்று நடைபெற்ற அந்நீதிமன்றத்தின் முதல் அமர்வில் ஆறு நீதிபதிகள் பணியாற்றினர்.
  • பாராளுமன்றமானது 1950 ஆம் ஆண்டில் 8 ஆக இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 2019 ஆம் ஆண்டில் 34 ஆக உயர்த்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்