பீகார் மற்றும் ஒடிசாவிற்கு அடுத்தபடியாக, கிழக்கு இந்தியாவில் ஜார்க்கண்ட் தனது கிராமப் புறங்களுக்கான உணவுப் பாதுகாப்பு வரைபடத்தினைக் கொண்ட மூன்றாவது மாநிலமாக மாறியுள்ளது.
ஒடிசா மற்றும் பீகார் ஆகியவை 2018 ஆம் ஆண்டில் தமது உணவுப் பாதுகாப்பு வரைபடத்தினை வெளியிட்டன.
ஜார்க்கண்ட் கிராமப்புற உணவுப் பாதுகாப்பு வரைபடமானது 2022 ராஞ்சியில் தொடங்கப் பட்டது.
இந்த வரைபடமானது மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பு நிலைமையை வரைபடம் ஆக்குவதற்கான ஒரு முயற்சியாகும்.
இது டெல்லியைச் சேர்ந்த மனித மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.