TNPSC Thervupettagam

உண்மை சரிபார்ப்புப் பிரிவு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

March 25 , 2024 116 days 178 0
  • உச்ச நீதிமன்றமானது திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப (IT) விதிகளின் மீதான செயலாக்கத்தினை நிறுத்தி வைத்துள்ளது.
  • "உண்மை சரிபார்ப்புப் பிரிவு" (FCU) மூலம் சமூக ஊடக தளங்களில் பரவும் "போலிச் செய்திகளை" அடையாளம் காண இந்த விதி அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்தது.
  • மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது, FCU பிரிவினைப் பத்திரிகைத் தகவல் வாரியத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அறிவித்தது.
  • சமூக ஊடகத் தளங்களில் மத்திய அரசு மற்றும் அதன் முகமைகள் தொடர்பான தவறான தகவல் பரவலை நிறுத்தும் அதிகாரம் இதற்கு உண்டு.
  • முன்னதாக, மும்பை உயர் நீதிமன்றம் ஆனது, “அரசு ஆனது ஒரு உரையினை உண்மை அல்லது பொய் என்று கட்டாயப்படுத்தி வகைப்படுத்த முடியாது மற்றும் அதனை வெளியிடக் கூடாது என்று கட்டாயப்படுத்த முடியாது எனக் கூறியது.
  • மேலும் இந்த விதிகள் ஆனது அரசியலமைப்பின் 14, 19(1)(a) மற்றும் (g), மற்றும் 21 ஆகிய சட்டப் பிரிவுகள் மற்றும் 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவு (IT சட்டம்) ஆகியவற்றை மீறுவதாக வாதிடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்