உத்கல் திவாஸ் (அ) உத்கலா திபாசா ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 01 அன்று ஒடிசா மாநிலம் உருவாக்கப் பட்டதை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.
ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் ஒடிசாவானது தற்போதைய பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகியவற்றை உள்ளடக்கிய வங்காள மாகாணத்தின் ஓர் அங்கமாக இருந்தது.
இந்த மாநிலம் ஆரம்பத்தில் ஒரிசா என்றழைக்கப்பட்டது.
ஆனால் அதனை ஒடிசா என்று பெயர் மாற்றம் செய்ய 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரிசா மசோதா மற்றும் அரசியலமைப்பு (113வது திருத்தம்) என்ற மசோதாவினை மக்களவை நிறைவேற்றியது.