தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மறைந்த மத்திய இராணுவப் பணியாளர்களின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் ஆகியோர் இந்த ஆண்டிற்கான "உத்தரகாண்ட் கௌரவ் சம்மான் விருதிற்கு" தேர்வு செய்யப்பட்ட ஐந்து புகழ்பெற்ற நபர்களுள் அடங்குவர்.
எழுத்தாளர் பிரசூன் ஜோஷி, மறைந்த கவிஞரும் எழுத்தாளருமான கிரிஷ் சந்திர திவாரி மற்றும் மறைந்த பத்திரிகையாளர் வீரேன் டங்வால் ஆகியோருக்கு மரணத்திற்குப் பின்னதாக இந்த விருதானது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதானது இரண்டு மிக உயர்ந்த மாநில அளவிலான குடிமக்கள் விருதுகளில் ஒன்றாக 2021 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவற்றுள் மற்றொன்று உத்தரகாண்ட் ரத்னா என்பதாகும்.
மனித நடவடிக்கைகள் சார்ந்த எந்தவொரு துறையிலும் அவர்கள் ஆற்றும் அசாதாரணமானப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.