வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 77வது ஆண்டு நிறைவையொட்டி ஒரே நாளில் 22 கோடி மரக் கன்றுகளை நடவு செய்து உத்திரப் பிரதேச அரசு சாதனை படைத்துள்ளது.
“விருக்சாரோபன் மகாகும்ப்” எனும் மாநில அளவிலான மரம் நடும் இயக்கத்தின் போது ஒரு மணி நேரத்தில் ஐந்து கோடி மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஆறு மணிநேரத்தில் ஒரே நேரத்தில் 76,823 மரக்கன்றுகளை விநியோகித்ததற்காக கின்னஸ் சாதனையை இம்மாநிலம் படைத்துள்ளது.
உத்திரப் பிரதேசத்தின் முதல்வர் அரசமரம், குருகிலை மற்றும் ஆலமரம் ஆகியவற்றின் கலவையாக நடப்படும் ஹரிஷங்கரியை நடவு செய்வதன் மூலம் இந்த மரக்கன்று நடும் இயக்கத்தினைத் தொடங்கி வைத்தார்.