உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் 188.3 மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் 37% பேர் மட்டுமே அந்தப் பாதிப்பு கொண்டு உடையவர்களாக கண்டறியப் படுகிறார்கள்.
30% மக்கள் அதற்கான சிகிச்சையைத் தொடங்குகிற நிலையில், மேலும் அதில் 15% பேர் மட்டுமே தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.
இந்தப் பாதிப்பு நிலையில் உள்ளவர்களில் பாதி பேர் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தால், 2040 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் குறைந்தது 4.6 மில்லியன் இறப்புகளைத் தடுக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இரத்த அழுத்தத்தினைக் கண்டறிதல் (வரம்பு: 6.3%-77.5%), சிகிச்சை (வரம்பு: 8.7%-97.1%) மற்றும் கட்டுப்பாடு (வரம்பு: 2.7%-76.6%) ஆகியவற்றில் பல்வேறு மாவட்டங்களில் கணிசமான வேறுபாடுகள் பதிவாகியுள்ளன.