TNPSC Thervupettagam

உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைகள்

April 30 , 2018 2272 days 768 0
  • ஜனவரி 1, 2019 முதல் உள்ளேயே தீர்மானிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக்கொண்ட உறுதியான உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைகள் அனைத்து வகையான வாகனங்களிலும் பொருத்தப்படும்.
  • இவை திருட்டுக்கு எதிரான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை ஏற்படுத்தித் தரும்.

  • இந்த பதிவெண் பலகைகள் 15 வருட உத்தரவாதத்துடன் அளிக்கப்படும். இவை தன்னைத்தானே அழித்துக் கொள்ளக் கூடிய, வாகனத்தின் இயந்திர எண் மற்றும் அடிப்பீட (சேசீங்) எண் ஆகிய உள்ளடங்கு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும்.
  • இந்த பலகைகள் வாகனத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும். ஜன்னல் திரைகள் முப்பரிமாண படிமம் அல்லது ஹோலோகிராம் கொண்ட எண் பலகையுடன் இருக்கும்.
  • வாகனத் தயாரிப்பாளர்கள் தாங்களாகவே இப்பதிவெண் பலகைகளை தயாரித்து, புதுதில்லியில் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்தோ அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு சோதனை மையங்களில் ஏதேனும் ஒன்றிடம் இருந்தோ அங்கீகாரச் சான்றிதழைப் பெற முடியும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்