ஆந்திரப் பிரதேசம் உயர்நீதிமன்றமானது, அமராவதியை அம்மாநிலத் தலைநகரமாக மாற்றுமாறும் 3 தலைநகரங்களை உருவாக்குவதற்கானப் புதிய ஒரு சட்டத்தினை இயற்றுவதற்கு அம்மாநில அரசிற்கு உரிமை இல்லை என்றும் தீர்ப்பளித்தது.
ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை அமைப்புகளை நிறுவச் செய்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கு பாராளுமன்றத்திற்கு மட்டுமே தகுதி உள்ளது எனவும், இது அரசியலமைப்புச் சட்டத்தின் 4வது சட்டப்பிரிவில் மறைமுகமாகக் கூறப் பட்டுள்ளதாகவும் அந்த நீதிமன்றம் கூறியது.