TNPSC Thervupettagam

உலக அதிர்ச்சி தினம் - அக்டோபர் 17

October 27 , 2023 300 days 168 0
  • அதிர்ச்சிகரமான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வேண்டி, அதிர்ச்சியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதும், அவர்கள் தங்கள் வாழ்வில் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது குறித்து கற்பிப்பதும் உலக அதிர்ச்சி தினத்தினைக் கடைபிடிப்பதன் முக்கிய நோக்கமாகும்.
  • வருடாந்திர உலக அதிர்ச்சி தினமானது முதல் முறையாக 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் புது டெல்லியில் நிறுவப்பட்டு ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் விபத்துகளால் ஏற்படும் காயத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டு இறக்கின்றனர்.
  • இது ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் ஒரு மரணம் நிகழ்வதற்கு இணையாக உள்ளது. என்பதோடு, இது உலகளவில் ஏற்படும் இறப்புகளில் 9 சதவிகிதமாகவும் உள்ளது.
  • ஆண்டுதோறும் இந்தியாவில் 10 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழப்பார்கள் என்றும், மேலும் 2 கோடி பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்