TNPSC Thervupettagam

உலக அரசு சாரா அமைப்புகள் தினம் - பிப்ரவரி 27

February 28 , 2024 143 days 318 0
  • இத்தினமானது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் பால்டிக் கடல் தன்னார்வ தொண்டு நிறுவன மன்றத்தால் முன்மொழியப்பட்டது.
  • முதல் உலக அரசு சாரா அமைப்புகள் தினம் ஆனது 2014 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் அரசு சாரா நிறுவனங்கள் -தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் - (NGO) வகிக்கும் முக்கியப் பங்கை அங்கீகரித்து கொண்டாடுவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பொதுவாக சுயாதீனமான, இலாப நோக்கற்ற நிறுவனங்களாகும் என்ற நிலையில், அவை பல்வேறு சமூக, சுற்றுச்சூழல் மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக உள்நாடு, தேசிய அல்லது சர்வதேச அளவில் பணியாற்றுகின்றன.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்: நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைவதில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்கு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்