2022 ஆம் ஆண்டு உலக எரிசக்தி கண்ணோட்ட அறிக்கையானது இந்த உலகளாவிய ஆற்றல் துறை மீதான அதிர்ச்சியின் தாக்கங்கள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கச் செய்வதற்காக சர்வதேச ஆற்றல் முகமையால் வெளியிடப்பட்டது.
உலகளவில் புதைபடிவ எரிபொருட்களின் முன்னணி ஏற்றுமதியாளராக ரஷ்யா விளங்கி வருகிறது.
இயற்கை எரிவாயு விலை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது.
பல வளர்ந்து வரும் நாடுகளில் வெகுவாக உயர்ந்துள்ள ஆற்றல் விலைகள் உணவுப் பாதுகாப்பின்மையை இன்னும் மோசமாக்கியுள்ளன.
சமீபத்தில் மின்சார வசதி பெற்ற சுமார் 75 மில்லியன் மக்கள் தங்கள் எரிசக்திக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், தூய்மையான மற்றும் பாதுகாப்பான ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சமையலுக்கு விறகுகளைச் சார்ந்து இருக்கும் நிலையானது அதிகரிக்க வாய்ப்புள்ளது.