TNPSC Thervupettagam

உலக இடம்பெயர்வு அறிக்கை 2020

November 29 , 2019 1730 days 639 0
  • ஐ.நா. சபையின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஆனது 2020 ஆம் ஆண்டுக்கான உலக இடம்பெயர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது சர்வதேச அளவில் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 270 மில்லியனாக இருப்பதாக மதிப்பிடுகின்றது.
  • சுமார் 51 மில்லியன் இடம்பெயர்ந்தோர்களைக் கொண்டு அமெரிக்காவானது இடம்பெயருபவர்கள் தேர்ந்தெடுக்கும் நாடுகளில் முதலிடம் வகிக்கின்றது.
  • இந்தியாவிலிருந்து 17.5 மில்லியன் மக்கள் சர்வதேச அளவில் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்வோர் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது.
  • வெளிநாடுகளில் வசிக்கும் மக்களிடம் இருந்து பணம் செலுத்துகை அதிகம் பெற்ற நாடுகளின் வரிசையில் அதிகபட்சமாக 78.6 பில்லியன் டாலர் பணம் பெற்று இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதனையடுத்து சீனா (67.4 பில்லியன் டாலர்) மற்றும் மெக்ஸிகோ (35.7 பில்லியன் டாலர்)ஆகிய  நாடுகள் உள்ளன.
  • பணம் அனுப்பும் நாடுகளில் அமெரிக்கா (68.0 பில்லியன் டாலர்), ஐக்கிய அரபு அமீரகம் (44.4 பில்லியன் டாலர்) மற்றும் சவுதி அரேபியா (36.1 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.
  • அகதிகளை உருவாக்கும் நாடுகளில் சிரியா (6 மில்லியன்) முதலிடத்திலும் அதனையடுத்து ஆப்கானிஸ்தானும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்