இந்தி மொழியை உலக அளவில் ஊக்கப்படுத்தும் வகையில் 2006 ஆம் ஆண்டு முதல் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இத்தினமானது 1975 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் தொடங்கப்பட்ட முதல் உலக இந்தி மாநாட்டின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
எனினும், முதலாவது உலக இந்தி மொழி தினமானது 2006 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் தொடங்கப்பட்டது.
இந்தி மொழியானது, ‘சிந்து நிலம்’ (The Land of Indus) எனப் பொருள்படுகின்ற ‘ஹிந்த்’ எனப் படும் ஒரு பாரசீக வார்த்தையிலிருந்து இப்பெயரை பெற்றது.