TNPSC Thervupettagam

உலக இரத்த ஒட்டுண்ணி (Chagas disease) நோய் தினம் – ஏப்ரல் 14

April 16 , 2020 1626 days 593 0
  • 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று உலகச் சமூகமானது முதன்முறையாக உலக இரத்த ஒட்டுண்ணி நோய் தினத்தை அனுசரித்தது.
  • மேலும் இந்த நோய் “அமெரிக்க டிரப்பனோசோமியாசிஸ்” (American trypanosomiasis) என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இந்த நோயானது மிகவும் அமைதியான மற்றும் அமைதியாக்கப் பட்ட நோயாகக் குறிப்பிடப் படுகின்றது.
  • இது மெதுவாக செயல்படும் திறன் கொண்டதாக உள்ளது. இது வறுமையில் வாழும் மக்களை மிக அதிக அளவில் பாதிக்கின்றது. 
  • இது மிக முக்கியமாக இலத்தீன் அமெரிக்காவில் உள்ள வறுமையில் வாடும் மக்களைப் பாதிக்கின்றது.
  • இது அமெரிக்கா, மேற்கு பசிபிக், ஐரோப்பா, கனடா ஆகியவற்றில் மிகப் பரவலாகக் காணப்படுகின்றது.
  • இத்தினமானது உலகச் சுகாதார அமைப்பால் குறிக்கப்படுகின்றது. 
  • இது டி குரூஸி (T cruzi) ஒட்டுண்ணி போன்ற நோய்க் கடத்தியால் கடத்தப்படுகின்றது.
  • மேலும் இது இரத்தத்தை உறிஞ்சும் வண்டுகளின் சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றுடன் ஏற்படும் தொடர்பின் மூலமும் பரவுகின்றது.
  • ஆனால் இது ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்குப் பரவாது.
  • இருப்பினும், இது பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தை வேறு ஒருவருக்குச் செலுத்துவதின் மூலம் பரவும் திறன் கொண்டது.
  • 1909 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று பிரேசிலில் இந்த நோய் கண்டறியப்பட்ட நோயாளியான டாக்டர் கார்லோஸ் ரிபேரியோ ஜஸ்டினேனோ  சாகாஸ்  என்பவரின் நினைவாக இதற்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
  • இது புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் வளரும் நாடுகளில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மக்களைப் பாதிக்கின்றது என்று அதற்கு பொருள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்