உலக உற்பத்தித்திறன் மாநாட்டின் (World Productivity Congress – WPC) 19வது பதிப்பானது பெங்களூரில் நடைபெற இருக்கின்றது.
WPC என்பது உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்கான உலகின் மிகப்பெரிய மாநாடு ஆகும். இது எதிர்கால உற்பத்தி வளர்ச்சியை வடிவமைக்கும் புதுமையான மற்றும் உலகத் தரம் வாய்ந்த நடைமுறைகளை ஊக்குவிக்கின்றது.
முந்தைய WPC ஆனது இந்தியாவில் 1974 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதன் பிறகு இது தற்பொழுது 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ளது.
19வது உற்பத்தித்திறன் மாநாடு - 2020ன் கருப்பொருள்: “தொழில் துறை 4.0 - புதுமை மற்றும் உற்பத்தித்திறன்” என்பதாகும்.
கனடாவின் மாண்ட்ரீயலைத் தலைமையிடமாகக் கொண்ட உலக உற்பத்தித் திறன் கூட்டமைப்பானது 1969 ஆம் ஆண்டு முதல் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து வருகின்றது.