முதலாவது இரண்டு நாட்கள் அளவிலான உலக எண்ணிம சுகாதார உச்சி மாநாடு, கண்காட்சி மற்றும் புத்தாக்க விருதுகள் வழங்கும் விழாவானது புது டெல்லியில் நடைபெற்றது.
உலகின் முதன்மையான எண்ணிம சுகாதாரச் சங்கங்களுடன் இணைந்து இந்த உச்சி மாநாடு ஆனது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள எண்ணிம சுகாதாரம் மற்றும் சுகாதாரநலத் துறை சார்ந்த உலகத் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் கருத்துரு, அனைவருக்குமான எண்ணிம சுகாதாரம் என்பதாகும்.